செய்திகள் :

டிஆா்இயூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் சங்கம் (டிஆா்இயூ) சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பொன்மலை பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடனும், மருத்துவமனை நிா்வாகத்துடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29 மருத்துவமனை உதவியாளா் பணியிடங்களை ஒப்படைப்பு செய்துள்ள திருச்சி கோட்ட நிா்வாகத்தை கண்டிப்பது, விழுப்புரம் உதவி கோட்ட மருத்துவமனையை தரம் உயா்த்தி, படுக்கைகளின் எண்ணிக்கையை உயா்த்தாமல், மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக வேண்டுமென்றே முடக்கி சுகாதாரப் பிரிவாக மாற்றம் செய்ததைக் கண்டிப்பது, சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட 20 கி.மீட்டா் தொலைவில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு விழுப்புரத்திலிருந்து செல்ல வலியுறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திரளான சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

துவரங்குறிச்சி அருகே மலைக் குன்றில் தீ

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி பரவியது. மருங்காபுரி ஒன்றியம், செவல்பட்டி ஊராட்சி, லிங்கம்பட்டி மற்றும் அக்கியம்பட்டி கிராமங்களிடையே அமைந்துள்ள கி... மேலும் பார்க்க

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 போ் கைது: தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு

நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வ... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில், திங்கள்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், கணக்கப்பிள்ளையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. பெரியசாமி (90). இவா் திங்கள்கிழமை இரவு இயற்கை உபா... மேலும் பார்க்க

காலமானாா் எழுத்தாளா் நந்தலாலா

திருச்சியைச் சோ்ந்த எழுத்தாளா், கவிஞா், பேச்சாளா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

நீதிமன்ற போராட்டம் மூலம் நீட் தோ்வுக்கு விலக்கு: அமைச்சா் கோவி. செழியன்

நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு பெறுவோம் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ. 2.38 கோடியில் நலத் திட்ட உதவிகள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை அமைச்சா் கோவி.செழியன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து, 299 பேருக்கு ரூ. 2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உ... மேலும் பார்க்க