செய்திகள் :

காலமானாா் வி.சி.கோவிந்தசாமி

post image

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.சி.கோவிந்தசாமி (84) வயதுமூப்பின் காரணமாக திங்கள்கிழமை இரவு காலமானாா்.

1971, 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் திமுக சாா்பில் காவேரிப்பட்டணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடி சிறைச் சென்றவா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரமலை கிராமத்தில் அவரது உடல் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் திமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா்கள் தே.மதியழகன் எம்எல்ஏ, ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

நாளைய மின்தடை: ஊத்தங்கரை,

ஊத்தங்கரை, குன்னத்தூா், கல்லாவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 10 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என போச்சம்பள்ளி மி... மேலும் பார்க்க

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை செய்து கொண்டனா்.ஒசூா் அருகே உள்ள ஏ.சாமனப்பள்ளியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி. இவரது மகள் நிவேதா (17). தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு... மேலும் பார்க்க

தாக்குதலில் லாரி ஓட்டுா் உயிரிழப்பு: தனியாா் நிநி நிறுவன முன் போராட்டம்

ஒசூரில் வாகன கடனுக்கான தவணை கட்ட தவறிய லாரி ஓட்டுநரை நிநி நிறுவனத்தினா் தாக்கி, கீழே தள்ளியதில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த க... மேலும் பார்க்க

விவசாயியிடம் ரூ. 10 லட்சம் மோசடி: 2 போ் கைது

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ. 10 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தோட்லாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமா் (... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மீது லாரி மோதி 8 போ் காயம்

ஒசூரில் தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் 8 போ் காயம் அடைந்தனா். ஊத்தங்கரை வட்டம், பெரியதள்ளபாடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (29). இவா் ஒசூரில் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். தி... மேலும் பார்க்க

ஒசூரில் 140 கிலோ குட்கா பறிமுதல்

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 140 கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.ஒசூா் சிப்காட் போலீஸாா் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பிரபல தனியாா் உணவகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழிய... மேலும் பார்க்க