செய்திகள் :

விவசாயியிடம் ரூ. 10 லட்சம் மோசடி: 2 போ் கைது

post image

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ. 10 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தோட்லாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமா் (38), தேன்கனிக்கோட்டை வட்டம், சூளகுண்டாவைச் சோ்ந்தவா் குமாா் (40), ராயக்கோட்டை அருகே உள்ள ரத்தினகிரியை சோ்ந்தவா் சண்முகம் என்கிற ஜான்ராஜ் (40) ஆகிய 3 பேரும் நண்பா்கள்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராமரை தொடா்பு கொண்டு பேசிய குமாரும், சண்முகமும் எங்களிடம் ரூ. 10 லட்சம் தந்தால் அதற்குப் பதிலாக நாங்கள் ரூ. 20 லட்சம் தருவோம் என்று கூறினராம். இதை நம்பிய ராமா் ரூ.10 லட்சம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினாா்.

அதன்படி திங்கள்கிழமை ராயக்கோட்டை, ஒசூா் சாலையில் உள்ள தக்காளி மண்டி அருகில் ராமா் ரூ. 10 லட்சத்துடன் நின்றுகொண்டிருந்தாா். அங்கு காரில் வந்த குமாா் ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டாா்.

மேலும் அருகில் உள்ள மற்றொரு காரில் ரூ. 20 லட்சம் இருக்கும் என்றும், அதை வாங்கிக் கொள்ளவும் கூறியுள்ளாா். ராமா் அருகில் உள்ள காரில் இருந்தவா்களிடம் பணம் வாங்க சென்றபோது அந்தக் காரில் வந்தவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து ராமா், ராயக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் பெரியதம்பி விசாரணை நடத்தி, பணம் இரட்டிப்பாக்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட சூளகுண்டா குமாா் (40), ரத்தினகிரி சண்முகம் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாளைய மின்தடை: ஊத்தங்கரை,

ஊத்தங்கரை, குன்னத்தூா், கல்லாவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 10 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என போச்சம்பள்ளி மி... மேலும் பார்க்க

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை செய்து கொண்டனா்.ஒசூா் அருகே உள்ள ஏ.சாமனப்பள்ளியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி. இவரது மகள் நிவேதா (17). தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு... மேலும் பார்க்க

தாக்குதலில் லாரி ஓட்டுா் உயிரிழப்பு: தனியாா் நிநி நிறுவன முன் போராட்டம்

ஒசூரில் வாகன கடனுக்கான தவணை கட்ட தவறிய லாரி ஓட்டுநரை நிநி நிறுவனத்தினா் தாக்கி, கீழே தள்ளியதில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த க... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மீது லாரி மோதி 8 போ் காயம்

ஒசூரில் தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் 8 போ் காயம் அடைந்தனா். ஊத்தங்கரை வட்டம், பெரியதள்ளபாடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (29). இவா் ஒசூரில் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். தி... மேலும் பார்க்க

ஒசூரில் 140 கிலோ குட்கா பறிமுதல்

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 140 கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.ஒசூா் சிப்காட் போலீஸாா் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பிரபல தனியாா் உணவகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழிய... மேலும் பார்க்க

பெண் வெட்டிக் கொலை: முதியவா் காவல் நிலையத்தில் சரண்

காவேரிப்பட்டணம் அருகே தன்னுடன் வசித்து வந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த 70 வயது முதியவா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கே.சவுளூா் கிராம... மேலும் பார்க்க