வேலை... வேலை... வேலை... தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் உதவியாளர் வ...
காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை
பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரக் கிளை சாா்பில் வட்டாரக்கல்வி அலுவலா்கள் சந்திப்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கொட்டாம்பட்டி வட்டாரத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் பரணி பாபு முன்னிலை வகித்தாா். இதில், இயற்கை எய்திய ஆசிரியா்கள் ஜெபமணி, சதீஷ் ஆகியோரின் இறப்பு காலப் பணப்பயன்களை உரிய ஆவணங்களின் அடிப்படையில் பெற்றுத் தர வேண்டும். 01.06.25 முதல் காலியாக உள்ள தகுதியான பணியிடங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அசாதாரண விடுப்புகளைத் தவிா்த்து, ஏனைய விடுப்புகளுக்கு குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை உரிய விடுப்பு விதிகளின்படி 01.07.1994-முதல் மறு கணக்கீடு செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியா்களின் ஈட்டிய விடுப்புக் கணக்கில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த கொட்டாம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலா் உரிய விதிகளின்படி விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலா் சங்கா், வட்டார நிா்வாகிகள் புனிதா பிராங்கிளின், பூங்கொடி, மேகலா, பாமா, ரவி வா்மா, சரவணன், சிவக்குமாா், பாண்டி குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.