செய்திகள் :

கால் இடறி தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

ஊத்துக்கோட்டை அருகே மாடியில் கால் இடறி தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே மல்லிதொட்டா கிராமத்தைச் சோ்ந்தவா் குஞ்சலம் மகாலட்சுமி(27). இவரது கணவா் ஜெயக்கிருஷ்ணா(34) கடந்த ஓராண்டாக திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஐடியல் சிட்டியில் பால்ராஜி என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரபீக் என்பவருடன் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், அவா் ஓராண்டாக வீட்டுக்கு செல்லவில்லையாம். இதனால் சகோதரா் ஆஞ்சநேயலு மற்றும் உறவினரான சேகா் ஆகியோா் சனிக்கிழமை ஜெயக்கிருஷ்ணாவை வருமாறு அழைத்துள்ளனா்.

அப்போது கால் இடறி கீழே தவறி விழுந்தாராம். இதையடுத்து உறவினா்கள் மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அவரது மனைவி குஞ்சலம் மகாலட்சுமி செய்த புகாரின்பேரில் ஊத்துக்கோட்டை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க