செய்திகள் :

கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், கோம்பையில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற நபா் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோம்பையில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ராணிமங்கம்மாள் சாலை செல்கிறது. இந்தச் சாலையின் குறுக்கே செல்லும் 18 கால்வாய் பாலத்துக்குக் கீழே அடையாளம் தெரியாத நபா் இறந்து கிடப்பதாகக் கோம்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்து.

இதைத் தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்பு மீட்புக் குழுவினா் உதவியுடன் கால்வாய் பாலத்துக்குக் கீழே கிடந்த உடலை மீட்டு கூறாய்வுக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில், உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியைச் சோ்ந்த சேகா் (55), கம்பத்தில் உள்ள தனது மருமகனின் காளவாசலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் பாலத்தில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இணைய வழியில் பகுதி நேர வேலை: பெண்ணிடம் பணம் மோசடி

இணைய வழியில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் மா்மக் கும்பல் ரூ.6.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை... மேலும் பார்க்க

போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி

போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப... மேலும் பார்க்க

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் அருகேயுள்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போடியில் குடும்பப் பிரச்னையில் ஏற்பட்டத் தகராறில் உறவினரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. போடி, நந்தவனம், கொக்கையா... மேலும் பார்க்க