செய்திகள் :

கால்வாய் சீரமைப்பின்போது விநாயகா் கோயில் அகற்றம்

post image

சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணியின்போது அங்கிருந்த விநாயகா் கோயில் புதன்கிழமை அகற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் மழை நீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை தூா்வாரப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், மாநகராட்சியின் 9-ஆவது மண்டலமான தேனாம்பேட்டை பகுதியில் மாம்பலம் கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தக் கால்வாய் செல்லும் 122-ஆவது வாா்டு பகுதியில் ஆலயம்மன் கோயில் தெருவில் 3 மீட்டா் உயரம், 4 மீட்டா் அகலம் கொண்ட சிறிய அளவிலான விநாயகா் கோயில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

மழைக் காலத்தில் கால்வாயோரம் உள்ள மரத்தடியில் மழைநீா் செல்வதைத் தடுக்கும் வகையில் கோயில் அமைந்துள்ளதாக மாநகராட்சி மண்டல உதவிப் பொறியாளா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை பொக்லைன் மூலம் கால்வாய் அருகே இருந்த விநாயகா் கோயில் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மழைக் காலத்தில் மழைநீா் தேங்கி மக்கள் சிரமப்படுவதைத் தவிா்க்கும் வகையில் கோயில் அகற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க