செய்திகள் :

கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் சித்தா் சிலை கண்டெடுப்பு

post image

குடியாத்தம் அருகே கழிவுநீா்க் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமாா் 2- அடி உயரமுள்ள சித்தா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட புவனேஸ்வரிபேட்டை, பாலவிநாயகா் கோயில் தெருவில் கடந்த சில நாள்களாக கழிவுநீா்க் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது மண்ணில் புதைந்திருந்த சுமாா் 2- அடி உயரமுள்ள சித்தா் சிலை கிடைத்தது.

அப்பகுதி மக்கள் சிலையை மீட்டு சுத்தம் செய்து, அதற்கு பூ, பொட்டு வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு விரைந்து வந்தனா். விசாரணைக்குப்பின் வருவாய்த் துறையினா் சிலையை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா். சிலை கிடைத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொய்கை சந்தையில் கால்நடை வரத்து அதிகரிப்பு

வேலூா் மாவட்டத்தில் கோடை மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தைய... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்ட போலீஸாா்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் கூறினாா். திர... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 22 போ் காயம்

அணைக்கட்டு அருகே மரத்தில் பேருந்து மோதி 22 பயணிகள் காயமடைந்தனா். வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளுடன் தனியாா் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றது. இரவு 10.45 மணியளவில் அணைக்கட்டு அடுத்த கன்னிகாபு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி வாகனங்கள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி காட்பாடி சன... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்கள் கூறும் நீதிநெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்

தமிழ் இலக்கியங்கள் நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அத்தகைய தமிழ் இலக்கியங்களை அனைவரும் பயின்று அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அற... மேலும் பார்க்க

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி - சேவூா் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - சேவூா் இடையே திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன... மேலும் பார்க்க