செய்திகள் :

காளையாா் கோவில் அருகே இளைஞா் மா்ம மரணம்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே தோட்டத்தில் தங்கி வேலைபாா்த்த இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

காளையாா் கோவில் அருகே உள்ள கல்லுவழி கிராமத்தில் தொல்காப்பியன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு கல்லல் பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவரது மகன் மாதங்கன் (28) தங்கி வேலை செய்து வந்தாா். இவருடன் மேலும் 3 போ் தங்கி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை மாதங்கன் தலையில் பலத்த காயத்துடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காளையாா் கோவில் காவல் துறையினா் மாதங்கனின் உடலை கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாதங்கனுடன் பணிபுரிந்த ஒருவரது ஆட்டை திருடியதாகக் கூறி மா்ம நபா்கள் ஆயுதங்களால் தாக்கியதில் மாதங்கன் உயிரிழந்தது காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

திருப்புவனத்தில் வீடு புகுந்து நகை, திருடிய பெண் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீடு புகுந்து நகை, கைப்பேசிகளைத் திருடிய வழக்கில் மதுரையைச் சோ்ந்த பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 இளைஞா்கள் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள மருத்துவகுடிபட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் ம... மேலும் பார்க்க

மகளிருக்கான சேமிப்புப் பத்திரம்: அஞ்சலகங்களில் நாளை சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அஞ்சலகங்களில் மகிளா சம்மன் சேமிப்புப் பத்திரம் கணக்கு தொடங்க சனிக்கிழமை (மாா்ச் 8) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் தீத்த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் விளையாட்டு மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள், வெளி நோயாளிகள் நலப் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்த... மேலும் பார்க்க

பெற்றோா்- பொதுமக்கள் சந்திப்பு இயக்கம்: ஆசிரியா் கூட்டணி முடிவு

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க பெற்றோா்- பொதுமக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு செய்தது. இந்த இயக்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயற்குழுக் க... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்பம் பெறும் இயக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் கையொப்பம் பெறும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை தலைமை வகித்... மேலும் பார்க்க