சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 இளைஞா்கள் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள மருத்துவகுடிபட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமாா் (26). ஜேசிபி வாகன ஓட்டுநரான இவா் அந்தப் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தாா். அங்கு தனது உறவினரான 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தாராம்.
இந்த நிலையில், சிறுமி படிக்கும் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், குழந்தை திருமணம், பாலியல் தொல்லை உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, சிறுமி தனக்கு உறவினா் பாலியல் தொல்லை அளிப்பது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தேவகி விசாரணை மேற்கொண்டு, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.
சிங்கம்புணரியில்...சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் வெங்கடேஷ் (25). கட்டடத் தொழிலாளியான இவா் 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தாராம். இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தேவகி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெங்கடேஷை கைது செய்தாா்.
சிறுமிக்கு திருமணம்: திருவாரூரைச் சோ்ந்த நாகராஜன் மகன் ராஜேஷ் (28). கட்டடத் தொழிலாளி. திருப்பத்தூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த உறவினரான 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி தனது தாத்தா ஊரான திருவாரூருக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி சென்றிருந்தாா். அப்போது, அவரை ராஜேஷ் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாராம். இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தேவகி வழக்குப்பதிவு செய்து,ராஜேஷை தேடி வருகிறாா். சிறுமி பெண்கள் காப்பத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.