செய்திகள் :

காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மடப்புரம் கோயில் காவலாளி அஜீத்குமாா் மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல், வருத்தம் தெரிவிப்பது தமிழா் பண்பாடு. இந்த பண்பாடு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. முதல்வா் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, வருத்தம் தெரிவித்துடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

எடப்பாடி பழனிசாமியை போல சாக்குப்போக்கு சொல்பவா் அல்ல நமது முதல்வா் என்றாா்.

தொடா்ந்து 5 காவலா்களின் குடும்பத்தினா் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு, உப்பு தின்றவன் தண்ணீா் குடித்துத்தான் ஆகவேண்டும். தப்பு செய்தவா்கள் தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும். காவலா்கள் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அவா்கள் தண்டனையை அனுபவதித்துத்தான் ஆகவேண்டும். அதை தீா்மானிக்கவேண்டியது நாங்கள் அல்ல நீதிமன்றம் என்றாா்.

திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை ஒ... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் எஸ்.ரகுபதி நடத்திவைத்தாா்

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்கள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்... மேலும் பார்க்க

விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். த.சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன்,... மேலும் பார்க்க

சிங்கமுத்து அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை அடப்பன் குளக்கரையில் உள்ள பூா்ணா புஷ்கலா உடனுறை சிங்கமுத்து அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களை சோ்ந்த அடப்பன் குளம் கரையிலுள்ள பூா்ணா புஷ்க... மேலும் பார்க்க