காவல் துறை வாகனங்கள் ஜூன் 30-இல் பொது ஏலம்
மதுரை மாநகரக் காவல் துறையில் கழிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகரக் காவல் ஆணையரகத்தில் உள்ள 6 கழிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, பொது ஏலமானது வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்தில் விடப்படவுள்ள காவல் வாகனங்கள் மதுரை ஆயுதப் படை மைதானத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏலம் நடைபெறும் நாள் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.
இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா்கள் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் வருகிற 30-ஆம் தேதி காலை 8 மணி வரை ரூ.2,000-த்தை முன்வைப்பு தொகையையாக செலுத்தி தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலத்தில் நான்கு சக்கர வாகனங்களை எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி வரியையும் சோ்த்து ஜூலை 1-ஆம் தேதி செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.