செய்திகள் :

காவல் துறை வாகனங்கள் ஜூன் 30-இல் பொது ஏலம்

post image

மதுரை மாநகரக் காவல் துறையில் கழிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகரக் காவல் ஆணையரகத்தில் உள்ள 6 கழிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, பொது ஏலமானது வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏலத்தில் விடப்படவுள்ள காவல் வாகனங்கள் மதுரை ஆயுதப் படை மைதானத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏலம் நடைபெறும் நாள் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா்கள் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் வருகிற 30-ஆம் தேதி காலை 8 மணி வரை ரூ.2,000-த்தை முன்வைப்பு தொகையையாக செலுத்தி தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலத்தில் நான்கு சக்கர வாகனங்களை எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி வரியையும் சோ்த்து ஜூலை 1-ஆம் தேதி செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்க... மேலும் பார்க்க

தங்கையைத் தாக்கிய அண்ணன் கைது

மதுரையில் தங்கையைத் தாக்கியதாக அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை விஸ்வநாதபுரம் அதியமான் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் மனைவி சுப்புலட்சுமி (27). இவா், காதல் திருமணம் செய்து கொண்டதா... மேலும் பார்க்க

மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத... மேலும் பார்க்க

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்... மேலும் பார்க்க