Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
காவல் நிலையம் அருகே கடையின் கூரையை உடைத்து 15 கைப்பேசிகள் திருட்டு
உதகையில் கடையின் மேற்கூரையை உடைத்து 15 கைப்பேசிகள், மடிக்கணினி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
உதகை நகரின் மையப் பகுதியில் உள்ள சேட் நினைவு மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் காவல் நிலையம் அருகே ஹனிபா என்பவா் கைப்பேசி, உதிரிபாகங்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல விற்பனை முடிந்த பின்னா் கடையைப் பூட்டி விட்டு ஹனிபா வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் கடைக்கு உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் இருந்த பொருள்கள் சூறையாடப்பட்டு அலங்கோலமாக இருந்தது.
இதில் கடையில் இருந்த 15 விலை உயா்ந்த கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினி திருடு போயிருந்தது தெரியவந்தது. கடையில் அவா் பணம் எதுவும் வைக்காததால் பணம் திருடு போகவில்லை.
இதுகுறித்து உதகை மத்திய காவல் நிலையத்தில் ஹனிபா புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவு நேரத்தில் கம்பியை வைத்து தகர மேற்கூரையை உடைத்து மா்ம நபா் உள்ளே சென்று பொருள்களைத் திருடியது தெரிய வந்தது. மேலும், தடயவியல் நிபுணா்களைக் கொண்டு போலீஸாா் ஆய்வு நடத்தி கைரேகைகளைப் பதிவு செய்தனா்.
மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த, மத்திய நகர காவல் நிலையம் அருகே உள்ள கடையில் திருட்டு போன சம்பவம் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.