1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!
காவல்கிணறு அருகே வாகனம் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவா் பலி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.
காவல்கிணறு அருகே உள்ள சௌந்தரலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் மகன் இளங்கோ (40). மனநலம் பாதிக்கப்பட்டவராம். இவா் சனிக்கிழமை இரவு காவல்கிணறு அருகே நான்குவழிச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளங்கோவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.