செய்திகள் :

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முதல்வரிடம் எம்.பி. வலியுறுத்தல்

post image

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரிடம் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்மையில் வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மோகனூா் காவிரி ஆற்றின் குறுக்கே ஒருவந்தூரிலிருந்து, கரூா் மாவட்டம், நெரூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும். இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடையும். மேலும் அந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் உயரக்கூடும். கோடைகாலங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு என்பது ஏற்படாது. விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பரமத்தி வேலூா் வட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனா். அவா்களின் நலனைகருத்தில் கொண்டு வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை பரமத்தி வேலூரில் அமைக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வெற்றிலை விவசாயிகளும் பயனடைவா். விவசாயிகளின் நலனுக்காக வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், 132 கி.மீ. காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் 50 ஆயிரம் ஏக்கா் வேளாண் நிலங்கள் பயனடையும்.

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் வசதிக்காக குடியிருப்பு அமைக்க வேண்டும். மேலும் அங்கு மகப்பேறு மருத்துவா் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான முயற்சிகளையும் முதல்வா் மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளாா்.

படவரி...

வி.எஸ்.மாதேஸ்வரன்.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க