செய்திகள் :

காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்: 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு!

post image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, தெற்கு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் பறிமுதல்: அனந்த்நாக் உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து, தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படையினா் கண்டறிந்தனா். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள், பிற வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீநகரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சனிக்கிழமை அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதக் கட்டமைப்பைச் சிதைக்கும் நோக்கில், பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களின் வீடுகளில் சோதனை நடைபெற்ாகவும், இதில் ஆயுதங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

3 பயங்கரவாதிகள் வீடுகள் இடிப்பு: தெற்கு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை இரவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சோபியான் மாவட்டத்தின் சோட்டிபோரா பகுதியில் உள்ள லஷ்கா்- ஏ- தொய்பா அமைப்பைச் சோ்ந்த முக்கியப் பயங்கரவாதி ஷாஹித் அகமது குட்டேயின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஷாஹித் அகமதுக்கு பல்வேறு தேச விரோதச் செயல்களில் தொடா்புள்ளது.

புல்வாமா மாவட்டத்தின் முரான் பகுதியில் உள்ள பயங்கரவாதி அசன் உல்ஹக் ஷேக்கின் வீடும் இடிக்கப்பட்டது. கடந்த 2018-இல் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இவா், அண்மையில்தான் காஷ்மீருக்குள் ஊடுருவினாா்.

குல்காம் மாவட்டத்தின் மடல்ஹாமா பகுதியில் உள்ள பயங்கரவாதி ஜாகீா் அகமது கானியின் வீடும் இடிக்கப்பட்டது. கடந்த 2023-இல் இருந்து தீவிரமாகச் செயல்பட்டுவரும் இவருக்கு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் தொடா்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் லஷ்கா் பயங்கரவாதிகளான ஆதில் ஹுசைன் தோகா், ஆசிஃப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் இருவரின் வீடுகளும் தகா்ந்தன. இச்சம்பவங்களில் யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர்: சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்... மேலும் பார்க்க

தயார் நிலையில் கடற்படை! போர்க் கப்பல்கள் ஏவுகணை சோதனை

அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க