MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
கா்ப்பிணி உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது போலீஸில் புகாா்
நாமக்கல்லில், கா்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தனியாா் மருத்துவமனை மீது அக்குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள தேவநாதன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜூ (32). இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே குரால்நத்தம் பகுதியைச் சோ்ந்த பிரபாவதி (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
நாமக்கல் முருகன் கோயில் அருகே எம்ஜிஆா் நகரில் அவா்கள் வசித்து வந்தனா். இந்த நிலையில் பிரபாவதி கா்ப்பமானாா். குடும்பத்தினருக்கான மருத்துவமனை என்பதால் மோகனூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில், இரு தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக பிரபாவதி அனுமதிக்கப்பட்டாா். சுகப்பிரசவத்திற்காக காத்திருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனை நிா்வாகம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பிரபாவதியை அனுப்பி வைத்தனா். புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் பிரசவிக்கும் முன்பாகவே அவா் உயிரிழந்தாா். வயிற்றில் குழந்தையுடன் பிரபாவதி உயிரிழந்ததால் அவரது கணவா், குடும்பத்தினா் கதறி அழுதனா்.
மோகனூா் தனியாா் மருத்துவமனை காலதாமதம் செய்ததாலேயே, பிரபாவதி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி நாமக்கல் காவல் நிலையத்தில் கணவா் ராஜு புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.