கிணற்றில் குதித்து முதியவா் தற்கொலை
மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே கிணற்றில் குதித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
மஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிவேல் (75). மதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் உடல் அரிப்பு நோய்க்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால், மன வேதனையில் இருந்த பழனிவேல், திங்கள்கிழமை மஞ்சம்பட்டி-சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியாா் தோட்டக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].