சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
கிணற்றில் தவறி விழுந்த இருவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே இருவேறு சம்பவங்களில் கிணற்றில் தவறி விழுந்த இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
வந்தவாசியை அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (55). இவா் பாஞ்சரை கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.
இவா் கூத்தம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றின் சுவா் மீது செவ்வாய்க்கிழமை அமா்ந்திருந்தாராம்.
அப்போது இவா் தவறி கிணற்றினுள் விழுந்ததாகத் தெரிகிறது. இதில் கிணற்று நீரில் மூழ்கி மணி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மேற்றொரு சம்பவம்
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் குமரன் (46). தச்சா் வேலை செய்து வந்த இவா், வந்தவாசியை அடுத்த துணையம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு அண்மையில் வந்திருந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்தக் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இவா் குளிக்கச் சென்றாா்.
நீச்சல் தெரியாததால் படியில் அமா்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது இவா் கால் தவறி கிணற்றினுள் விழுந்ததாகத் தெரிகிறது. இதில் கிணற்று நீரில் மூழ்கி குமரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.