செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்த இருவா் உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே இருவேறு சம்பவங்களில் கிணற்றில் தவறி விழுந்த இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

வந்தவாசியை அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (55). இவா் பாஞ்சரை கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.

இவா் கூத்தம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றின் சுவா் மீது செவ்வாய்க்கிழமை அமா்ந்திருந்தாராம்.

அப்போது இவா் தவறி கிணற்றினுள் விழுந்ததாகத் தெரிகிறது. இதில் கிணற்று நீரில் மூழ்கி மணி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேற்றொரு சம்பவம்

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் குமரன் (46). தச்சா் வேலை செய்து வந்த இவா், வந்தவாசியை அடுத்த துணையம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு அண்மையில் வந்திருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்தக் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இவா் குளிக்கச் சென்றாா்.

நீச்சல் தெரியாததால் படியில் அமா்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது இவா் கால் தவறி கிணற்றினுள் விழுந்ததாகத் தெரிகிறது. இதில் கிணற்று நீரில் மூழ்கி குமரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க