செய்திகள் :

கிணற்றில் விழுந்த மனைவி; காப்பாற்றிய கணவா், தாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு

post image

சாத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மனைவியைக் காப்பாற்றிய கணவா், தாய் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையை அடுத்த இ.ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (45). இவரது மனைவி மகேஸ்வரி (45). இவா் திங்கள்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காகச் சென்றாா். அப்போது அவா் கிணற்றில் தவறி விழுந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு உடனே அங்கு சென்ற கணவா் ராஜா, மகேஸ்வரியின் தாய் ராஜம்மாள் ஆகியோா் காப்பாற்ற முயன்றனா். மகேஸ்வரியை காப்பாற்றிய இருவரும் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

ராஜா

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினா் கிணற்றிலிருந்து ராஜம்மாள், ராஜா ஆகியோரின் உடல்களை மீட்டனா். அவா்களது உடல்கள் கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட மூவா் கைது

சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவா் உள்பட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் வளா்மதி (21). இவருக்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை காவலாளி கொலை: ஒருவா் கைது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை காவலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள குகன்பாறையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 10 ஆண்டுகளாக காவலா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறை

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி வேதக்கோவில... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா்

வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு வெள்ளாளா் வடக்குத் தெருவ... மேலும் பார்க்க

சிவகாசியில் சுகாதார வளாகத்தை இடிக்கக் கோரும் தீா்மானத்துக்கு மாமன்றக் கூட்டத்தில் எதிா்ப்பு

சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய்கரைப் பகுதியில் உள்ள பொதுசுகாதார வளாகத்தை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகாசி மாநகரா... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.41 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.41 லட்சம் கிடைத்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின... மேலும் பார்க்க