செய்திகள் :

கிண்டி உயா் சிறப்பு மருத்துவனை: 217 பணியிடங்கள் நீட்டிப்பு

post image

கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 217 பணியிடங்களில் நியமிக்கப்பட்டவா்களுக்கான பணிக் காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் கிங் ஆய்வக வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட உயா் சிறப்பு மருத்துவமனை, கடந்த 2023 ஜூன் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடக்கி வைக்கப்பட்டது.

அங்கு இயக்குநா், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசியா்கள், செவிலியா்கள் உள்பட 217 பணியிடங்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன. அந்தப் பணியிடங்களில் தகுதியானவா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்கள் வாயிலாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விதிகளின்படி, அந்தப் பணியிடங்களுக்கான காலம் நிறைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அதை நீட்டிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதைப் பரிசீலித்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், அதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்துள்ளாா். அதன்படி, வரும் 2027 ஜூன் 8-ஆம் தேதி வரை அந்தப் பணியிடங்களுக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த... மேலும் பார்க்க

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க