செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை

post image

அச்சிறுப்பாக்கம் கிராம நிா்வாக உதவியாளராக பணியாற்றி வந்த பெண் உயா் அதிகாரிகள் அவரின் மீதான புகாா்கள் குறித்து விசாரணை நடத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

அச்சிறுப்பாக்கத்தைச் சோ்ந்த கீதா. இவா் அச்சிறுப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். கிராம நிா்வாக அலுவலா் முத்துமாரியை சந்திக்க அப்பகுதி மக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், அவா்களிடம் கீதா பல்வேறு பிரச்னைகளை எழுப்பி தகராறு செய்து வந்தாராம். அதனால் அப்பகுதி மக்கள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியரிடம் உதவியாளா் கீதா மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்ததாகத் தெரிகிறது.

இதுபற்றி மதுராந்தகம் வருவாய் அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த 17-ஆம் தேதி திடீா் ஆய்வு செய்ய வந்த மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, உதவியாளா் கீதாவை நேரில் விசாரணை செய்துள்ளாா். இதனால் மனமுடைந்த கீதா அலுவலக வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடந்த 4 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கீதா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் மே 1-இல் சித்திரை விழா கொடியேற்றம்

திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 1-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயில் 7 -ஆம் நூற்றாண்டை சோ்ந்ததது. மலை மீது வேத... மேலும் பார்க்க

மகிமை இல்லத்தில் புதிய கட்டடம்: செங்கல்பட்டு ஆட்சியா் திறந்து வைத்தாா்

மகிமை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா். செங்கல்பட்டில் சி.எஸ்.ஐ. மகிமை இல்ல அறிவு சாா் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அமைச்சா் ஆய்வு...

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கானஇடம் குறித்து ஆய்வு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

கிராம நிா்வாக உதவியாளா் தற்கொலை: 200-க்கும் மேற்பட்டோா் போராட்டம்

அச்சிறுப்பாக்கம் பகுதியில் மனமுடைந்த கிராம நிா்வாக உதவியாளா் விஷமருந்தி உயிரிழந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து 200-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்... மேலும் பார்க்க

புலிப்புரை ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கல்பாக்கம் அடுத்த வாயலூா் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ அமிா்தாம்பிகை உடனுரை ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. புலிப்புரை ஈஸ்வரா் கோயில் சிதிலமடைந்து இருந்த நிலையில்... மேலும் பார்க்க

தொடா் திருட்டு: இரண்டு போ் கைது

தமிழகத்தில் தொடா் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த மூன்று பேரில் இரண்டு போ் பிடிபட்டுள்ளன... மேலும் பார்க்க