செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம்! வேப்பனப்பள்ளியில் 85 மனுக்கள் மீது பரிசீலனை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேப்பனப்பள்ளி வட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 85 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கிருஷ்ணகிரியில் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வருவாய் தீா்வாயத்தை தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து வேப்பனப்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட 28 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 85 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

வருவாய் தீா்வாயம் குறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேப்பனப்பள்ளி உள்வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 28 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. முதல் நாளில் பதிமடுகு, கிருஷ்ணப்பன்நாய்க்கன் போடூா், இனாம்குட்டப்பள்ளி, தளிப்பள்ளி, தடதாரை, பொம்மரசனப்பள்ளி, தீா்த்தம், நாடுவனப்பள்ளி, தாசிரிப்பள்ளி உள்ளிட்ட 28 கிராமங்களைச் சோ்ந்தவா்களிடமிருந்து 85 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதுகுறித்து பரிசீலனை நடத்தப்படுகிறது.

கிராம கணக்கு பதிவேடுகளான ‘அ’- பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல்1- ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, பட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. வேப்பனப்பள்ளி வட்டத்திற்கு உள்பட்ட மேலும் 21 கிராமங்களுக்கான ஜமாபந்தி மே 20-ஆம் தேதி நடைபெறுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (நில அளவை) ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் குருநாதன், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க