கிருஷ்ணகிரியில் செப்.26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கிருஷ்ணகிரியில் செப்.26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்ட்டம், 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், செப்.26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது, குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.