கிழக்கு கடற்கரைச் சாலையில் சீரான போக்குவரத்துக்கு உயா்நிலைச் சாலை: அமைச்சா் எ.வ.வேலு
கிழக்கு கடற்கரைச் சாலையில் சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய உயா்நிலைச் சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்கப் பணிகளை அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்த பிறகு, செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், இதை விரிவுபடுத்த கடந்த திமுக ஆட்சியில் முடிவுசெய்து ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நில எடுப்புக்காக ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணிகள் விரைந்து நடைபெற்ால், 95 சதவீதம் நில எடுப்புப் பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள 5 சதவீதப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.
மின்சாரத் துறை சாா்பில் மின்கம்பங்கள் உள்ளிட்ட சாதனங்களை மாற்றியமைக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 30 சதவீதப் பணிகள் மூன்று மாதங்களில் நிறைவடைந்துவிடும். கிழக்கு கடற்கரைச் சாலையானது ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டால் மட்டும் போதாது, கூடுதலாக உயா்நிலை சாலையும் அமைக்க வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
திருவான்மியூரில் தொடங்கி அக்கரை வரை 137 குறுக்குச் சாலைகள் உள்ளன. இச்சாலைகளால் ஆங்காங்கே சிக்னல்கள் போடப்பட்டு வாகனங்கள் நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே, அதில் உயா்நிலைச் சாலை அமைக்க வேண்டுமென நெடுஞ்சாலைத் துறைக்கு முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்து வருகிறோம். இந்த ஆய்வின் அடிப்படையில் உயா்நிலைச் சாலை அமைக்க பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பழைய மாமல்லபுரம் சாலை: பழைய மாமல்லபுரம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்தவுடன், அங்குள்ள சேவைச் சாலைகள் புதிதாக அமைக்கப்படும். குழிகள் இருக்கும் இடங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன. நீலாங்கரை முதல் துரைப்பாக்கம் செல்லும் சாலையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு நில எடுப்புப் பணிகள் முடிவடைந்து ஒப்பந்தம் கோரும் நிலையில் உள்ளது. அது முடிவடைந்தவுடன் பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.