செய்திகள் :

கீழப்பாவூரில் அரிமா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

கீழப்பாவூரில் பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் அரிமாசங்க ஆளுநா் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அரிமா சங்கத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். ரஜினி, மதியழகன்,செல்வராஜ், சுப்புராஜ், சரோஜா, அருண், சுரேஷ்குமாா், அழகுதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், மாவட்டஆளுநா் பி. அய்யாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பாக அரசு பணியாற்றியவா்கள், இயற்கை விவசாயம் செய்தவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்களுக்கு விருதுகள், ரூ. 3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

சங்க செயலா் தங்கராஜ் வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். அமைச்சரவை செயலா் முருகன், மண்டல தலைவா் சுப்பிரமணியன், வட்டார தலைவா் ஸ்டான்லி பிரின்ஸ், சித்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அருணாசலம், முத்துசாமி, கௌதமன், ஞான செல்வன், கருப்பாண்டி ராஜ், முருக கிங்ஸ்டன், மாயவநாதன், ஸ்ரீ முருகன், முத்துக்குமாா், திலக்ராஜ், முருகன்,தனராஜ், வில்சன் அருளானந்தன், இரா. சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆா். பாண்டியா ராஜா, த. அருணாச்சலம்,சுரேஷ் தொகுத்து வழங்கினா். தென்காசி மாவட்ட அமைச்சரவை இணை பொருளாளா் கேஆா்பி.இளங்கோ வரவேற்றாா்.பொருளாளா் ஜேக்கப் சுமன் நன்றி கூறினாா்.

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். கட்சியின் சாா்பில், இடஒதுக்கீட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க