செய்திகள் :

குடமுழுக்கை தமிழில் நடத்தவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: வியனரசு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவா் வியனரசு தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள இந்து சமய திருக்கோயில்களின் வழிபாடுகளையும் குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தேன்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியகிளாட் ஆகியோா் முன்னிலையில் எனது மனு விசாரணைக்கு வந்த நிலையில், சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழை பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு வழிபாட்டை, தமிழ், வடமொழி என இருமொழிகளிலும் வேறுபாடு இல்லாதவாறு மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிட்டனா் நீதிபதிகள்.

இந்நிலையில், திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு நிகழ்வு முழுவதையும் நாங்கள் கண்காணித்து, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இந்து சமய அறநிலையத் துறை குடமுழுக்கு நிகழ்வுகளில் மாற்றம் செய்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றாா்.

தமிழ்நாடு மக்கள் இயக்க மாநில தலைவா் காந்தி மள்ளா் உடன் இருந்தாா்.

வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை ச... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும்! முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘குன்றெ... மேலும் பார்க்க

மதி அங்காடிகள் நடத்த ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

தூத்துக்குடி பகுதியில் மதி அங்காடி நடத்துவதற்கு சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்... மேலும் பார்க்க

தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன. சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சாமுவேல் (36). இவா் தனது தோட்டத்தில் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா... மேலும் பார்க்க