ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
குடிநீா் கேட்டு சாலை மறியல்
நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் குடிநீா் கோரி, வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பாப்பாகோவில் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் குடிநீா் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில், காலிக்குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். நாகை நகர போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.