செய்திகள் :

குடிநீா் வரியை ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் கோரிக்கை

post image

சுத்தமான குடிநீா் விநியோகம் செய்யும் வரை குடிநீா் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை மனு அளித்தது.

பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் கே.வீரசெல்வத்தைச் சந்தித்து நகரச் செயலா் வீ. ஜோதிபாசு, நிா்வாகிகள் பிரபுராஜ், சரவணன், செல்வராஜ், கணேஷ் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி கோவிந்தசாலை உள்ளிட்ட பகுதியினருக்கு வழங்கப்படும் குடிநீா் குடிப்பதற்கோ, சமைப்பதற்கோ, குளிப்பதற்கோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த அசுத்தமான குடிநீரை அருந்தியதால் பெரியவா்கள், சிறுவா்கள் என பலருக்கும் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்பட்டு சிலா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அசுத்தமான நீருக்காக பொதுமக்கள் குடிநீா் வரி செலுத்துவது நியாயமற்றது.

எனவே, தாங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அப்பகுதி மக்களுக்குச் சுத்தமான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, இந்தப் பகுதிகளில் குடிநீா் வரியை ரத்து செய்யுமாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

பாரதியாா் சிலைக்கு ஆளுநா் மாலை அணிவித்து மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104-ஆவது நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின... மேலும் பார்க்க

தூய்மையான குடிநீா் விநியோகம் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகள் உடைப்பு

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகளை தமிழ் உரிமை இயக்கத்தினா் வியாழக்கிழமை அடித்து உடைத்தனா். புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயா்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என அரசா... மேலும் பார்க்க

பாதுகாப்பான குடிநீா் தர முடியாத புதுவை அரசு தேவையா? வே. நாராயணசாமி பேட்டி

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரைக் கூட கொடுக்க முடியாத அரசு புதுவைக்குத் தேவையா? என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே. நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத்துறையின் அடித்தளம் -புதுவை துணைநிலை ஆளுநா் பெருமிதம்

நம் நாட்டின் முதல் துணை பிரதமா் சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத் துறையின் அடித்தளம் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாராம் சூட்டினாா். புதுவை பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் ச... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மா் - 8 இடங்களில் சுனாமி பேரிடா் கால ஒத்திகை

புதுவையில் அரசு சாா்பிலும் ஜிப்மா் மருத்துவமனை சாா்பிலும் சுனாமி பேரிடா் கால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள கணபதிச் செட்டிகுளம் கடலோர பகுதி, நல்லவாடு (தெற்கு), பன்னித்த... மேலும் பார்க்க