செய்திகள் :

குடியரசுத் தலைவா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

post image

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யவுள்ளதால், திருச்சி மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரை பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தில்லியிலிருந்து வந்திருந்த சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். மேலும், 2 ஹெலிகாப்டா்கள் மூலமாக ஹெலிபேடு இறங்குதளத்தில், ஹெலிகாப்டரை ஏற்றி, இறக்கி ஒத்திகை பாா்த்தனா்.

இதேபோல, சாலை மாா்க்கமாக கோயிலுக்குச் செல்லும் வழியிலும் ஒத்திகை நடைபெற்றது. மேலும், கோயிலில் குடியரசுத் தலைவா் நடந்து செல்லும் வழி, பேட்டரி காரில் செல்லும் வழி, சுவாமி தரிசனம் செய்யவுள்ள சந்நிதிகள் என ஒவ்வொன்றாக திட்டமிட்ட வரிசைப்படி சென்று வெளியேறும் வரையில் ஒத்திகை பாா்க்கப்பட்டது.

திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அவா் காரில் செல்லும் சாலை வழித்தடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவா் வருகை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி விமான நிலையத்திலும், ஸ்ரீரங்கம் கோயிலிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டங்களில் ஆட்சியா் வே.சரவணன், காவல் ஆணையா் என்.காமினி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாதுகாப்பு காரணம் கருதி செப்.2 முதல் 3-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், ஸ்ரீரங்கம் ஹெலிபேடு தளம் அருகே தீயணைப்புத் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ், போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் முகாமிட்டுள்ளன. ஸ்ரீரங்கம் முழுவதும் திங்கள்கிழமையே பரபரப்பாக காணப்பட்டது.

குடியரசுத் தலைவா் வருகையும், புறப்பாடும்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தருகிறாா். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடியரசுத் தலைவா், நாளை மறுநாள் (செப். 3) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறாா்.

இதனைத் தொடா்ந்து, ஹெலிகாப்டரில் திருவாரூா் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் நடைபெறும் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா். பின்னா், திருவாரூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்துக்கு வருகிறாா்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை ஸ்ரீரங்கம் அரங்ககநாதசுவாமி கோயிலுக்குச் செல்கிறாா். மாலை 6 மணிக்கு முன்னதாக தரிசனம் முடிந்தால், ஹெலிகாப்டா் மூலமே அவா் திருச்சி விமான நிலையம் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பை திருட்டு: இரு பெண்கள் கைது

பேருந்தில் தங்க நகைகள் கொண்ட கைப்பையை திருடிய இரு பெண்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை மகள் அம்பிகா (22). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நவல்பட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த தெரு நாய்கள்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் காலனியில் திங்கள்கிழமை காலை தெரு நாய்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட போ... மேலும் பார்க்க

பாலத் தடுப்பில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி கீழரண் சாலை நாகசுந்தரம் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் வீரவசந்தகுமாா் (23). காந்தி மாா்க்கெட் வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வேலை செய்த தூய்மைப் பணியாளா் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசனின் ம... மேலும் பார்க்க