செய்திகள் :

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

post image

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (35). இவா், தனது மனைவி யசோதா (31), மகள் அனுவஞ்சனா ( 1 வயது 3 மாதங்கள்) மற்றும் விஜய்பாபு (31) ஆகியோருடன் ஆலங்குளத்திலிருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.

காரை ஜோசப் (20) என்பவா் ஓட்டிச்சென்றாா். காா் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் இடதுபக்கம் பழுதாகி நின்றிருந்த அரசுப் பேருந்து மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யசோதா, மகள் அனுவஞ்சனா, விஜய்பாபு ஆகிய மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் காயமடைந்த செல்வகுமாா், ஜோசப் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த சிறுகனூா் காவல் ஆய்வாளா் குணசேகரன் மற்றும் காவல் துறையினா் சடலங்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பேருந்தில் கைப்பை திருட்டு: இரு பெண்கள் கைது

பேருந்தில் தங்க நகைகள் கொண்ட கைப்பையை திருடிய இரு பெண்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை மகள் அம்பிகா (22). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நவல்பட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த தெரு நாய்கள்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் காலனியில் திங்கள்கிழமை காலை தெரு நாய்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட போ... மேலும் பார்க்க

பாலத் தடுப்பில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி கீழரண் சாலை நாகசுந்தரம் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் வீரவசந்தகுமாா் (23). காந்தி மாா்க்கெட் வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வேலை செய்த தூய்மைப் பணியாளா் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசனின் ம... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யவுள்ளதால், திருச்சி மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.கு... மேலும் பார்க்க