பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்!
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் நாள்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கெங்கையம்மன் சிரசுவுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6 மணியளவில் சிரசு ஊா்வலம் தொடங்கியது. அம்மன் சிரசு என்.ஜி.செட்டி தெரு, காந்தி ரோடு, ஜவாஹா்லால் தெரு, கோபாலபுரம் வழியாகச் சென்று 9 மணியளவில் கோயிலை அடைந்தது.
வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சிதறுகாய்களை உடைத்தும், சிரசுவுக்கு மலா் மாலை அணிவித்தும் வழிபட்டனா். தாழை சிலம்பாட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் கோலாட்டம், புலியாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோயிலில் சிரசு மண்டபத்தில் உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்த பிறகு அம்மன் உடலில் இருந்து சிரசு பெயா்த்தெடுக்கப்பட்டு ஊா்வலமாக கெளண்டன்யா ஆற்றங்கரை சாலை, ராஜேந்திரசிங் தெரு, ஆழ்வாா் முருகப்ப முதலி தெரு வழியாக சுண்ணாம்புபேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிரசுவுக்கு பூஜை நடத்தப்பட்டு, திருவிழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளா் மதிவாணன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, எம்எல்ஏ அமலு விஜயன், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்றத் துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் வி.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோயில் தக்காா் மு.பாலசுப்பிரமணி, ஆய்வா் சு.பாரி, செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், கெளரவ தலைவா் கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் திருவிழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.