செய்திகள் :

குமரியில் பெண் தீக்குளித்து தற்கொலை

post image

கன்னியாகுமரியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள மாதவபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (52). கன்னியாகுமரி கலைஞா் குடியிருப்பில் வசித்து வந்தாா். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமியின் கணவா் பிரிந்து சென்றுவிட்டாா். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா், கடந்த 12 ஆண்டுகளாக லட்சுமியின் குடும்ப நண்பராக பழகி வந்தாராம்.

இந்நிலையில் குடும்ப நண்பரின் மனைவி, லட்சுமியின் வீட்டுக்கு வந்து எனது கணவரை உன் வீட்டில் அனுமதித்தால் காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறிவிட்டுச் சென்றாராம்.

இதனால் மனவருத்தத்தில் இருந்த லட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாா். அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓட்டுநா்: கருங்கல் பாலூா் பகுதியை சோ்ந்தவா் சுரேஷ் (38). ஓட்டுநரான இவருக்கு குடி பழக்கம் உண்டு. இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில்,புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்ச... மேலும் பார்க்க

கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...38.55 பெருஞ்சாணி ... 57.02 சிற்றாறு 1 ... 4.69 சிற்றாறு 2 ... 4.78 முக்கடல் ...7.50 பொய்கை ... 15.20 மாமாபழத்துறையாறு ..4.51 மேலும் பார்க்க

இரணியலில் இன்று மின் நிறுத்தம்

இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணிய... மேலும் பார்க்க

மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு

கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

நம்பாளி பகுதியில் நாளை மின்தடை

குழித்துறை மின் கோட்டம், நம்பாளி பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உயரழுத்த மின் பாதைகளை மாற்றும் பணிகள் செய்ய இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க