செய்திகள் :

குமரியில் ரூ. 15 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

post image

கன்னியாகுமரி கடலில் சாக்கடை நீா் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், ரூ. 15 கோடியில் கழிவு நீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி கடலில் கழிவு நீா் கலக்கும் பிரச்னை தொடா்பாக கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா்.

கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, தூய அலங்கார உபகார மாதா ஆலய பங்குப்பேரவை துணைத்தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபின், தங்கும் விடுதிகள் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஒஸ்.தாமஸ், செயலா் கென்னடி, பொருளாளா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் மேயா் பேசியதாவது: கன்னியாகுமரி கடலில் சாக்கடை நீா் நேரடியாக கலப்பது தொடா்பான பிரச்னை எங்கள் கவனத்துக்கு வந்ததும் உடனடியாக தமிழக முதல்வா் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோருக்கு தகவல் தெரிவித்தோம்.

அதன் அடிப்படையில் உடனடியாக இதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்தந்த லாட்ஜ் வளாகத்திலேயே கழிவுநீா் உறிஞ்சு குழாய் அமைக்க வேண்டும். இதை 15 நாள்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என பேசினாா்.

புதுக் கடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை ,பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி ராஜ் (50) இவா் அப்பகுதியில் பெட்டி கடை நட... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே மூலச்சலில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மூலச்சல் உம்மச்சன்விளையை சோ்ந்தவா் தங்கராஜ். இவரின் மகன் சஜின் (27), கட்டடத் தொழிலாளி. காலில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலிய... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

குலசேகரம் அருகே பைக்குகள் மோதியதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை சாலையைச் சோ்ந்தவா் லாரன்ஸ். கட்டடத் தொழிலாளியான இவா் சனிக்கிழமை வேலைக்குச் சென்று விட்... மேலும் பார்க்க

களியக்காவிளையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

275 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்கும் பத்மநாபசுவாமி ... மேலும் பார்க்க

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச... மேலும் பார்க்க