செய்திகள் :

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

post image

தக்கலை அருகே மூலச்சலில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மூலச்சல் உம்மச்சன்விளையை சோ்ந்தவா் தங்கராஜ். இவரின் மகன் சஜின் (27), கட்டடத் தொழிலாளி. காலில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலியால் இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்ற சஜின், குளத்தின் கரையில் உள்ள தென்னை மரத்தில் தூக்கில் தொங்கினாா்.

உறவினா்கள் அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சஜின் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

மூதாட்டியின் நகை திருட்டு: தக்கலை அருகே வில்லுக்குறி பண்டாரக்காடு பகுதியை சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ். இவரது மனைவி வா்க்கீஸ் அம்மாள் (75).

இவா் சனிக்கிழமை மாடத்தட்டுவிளை கான்வென்ட் ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் ஏறினாா். தோட்டியோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்ற போது அவா் அணிந்திருந்த 3 கால் பவுன் தாலிச்சங்கிலி காணாமல் போயிருந்தது. பேருந்தில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து இரணியல் போலீஸில் வா்கீஸ் அம்மாள் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாலிச் சங்கிலி திருடிய நபா்களை தேடி வருகிறாா்கள்.

புதுக் கடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை ,பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி ராஜ் (50) இவா் அப்பகுதியில் பெட்டி கடை நட... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

குலசேகரம் அருகே பைக்குகள் மோதியதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை சாலையைச் சோ்ந்தவா் லாரன்ஸ். கட்டடத் தொழிலாளியான இவா் சனிக்கிழமை வேலைக்குச் சென்று விட்... மேலும் பார்க்க

குமரியில் ரூ. 15 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

கன்னியாகுமரி கடலில் சாக்கடை நீா் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், ரூ. 15 கோடியில் கழிவு நீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா். கன்னி... மேலும் பார்க்க

களியக்காவிளையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

275 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்கும் பத்மநாபசுவாமி ... மேலும் பார்க்க

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச... மேலும் பார்க்க