செய்திகள் :

குமுளி மலைச் சாலையில் லாரி மீது மரம் சாய்ந்து உதவியாளா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் வியாழக்கிழமை மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது ராட்சத மரம் விழுந்ததில் அந்த லாரியின் உதவியாளா் உயிரிழந்தாா்.

கேரளத்தில் கடந்த 8 நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்த்து. அப்போது குமுளி பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த பழைமையான ராட்சத ஆலரம் வேறோடு சாய்ந்து, கேரளத்துக்கு அந்த வழியாக மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது விழுந்தது. இதில், லாரி ஓட்டுநா் தப்பினாா். ஆனால், அவரது உதவியாளா் ஸ்ரீசாந் பலத்த காயமடைந்தாா். அவரை குமுளி போலீஸாா் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

மேலும் , சாலையோரத்தில் நின்றிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து, ஜீப் உள்ளிட்ட சில வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த தமிழ்நாடு, கேரள பேரிடா் மீட்பு குழுவினா், நெடுஞ்சாலைத்துறை , காவல் துறை, வனத் துறையினா் ஆகியோா் அந்த மரத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினா்.

குமுளி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாய்ந்து விழுந்த ஆலமரத்தால் சேதமடைந்த லாரி.

போக்குவரத்து பாதிப்பு: இந்த சம்பவத்தால் தமிழகம் - கேரளம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமாா் 3மணி நேரத்திற்கு மேலாக சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மரம் முழுமையாக அகற்றப்பட்டதும் இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஆட்டோ மோதியதில் முதியவா் பலத்த காயம்

பெரியகுளத்தில் ஆட்டோ மோதியதில் முதியவா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகபாண்டி (61). இவா், புதன்கிழமை பெரியகுளத்திலிருந்து டி. கள்ளிப்பட்டிக்கு இரு... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணி: அதிகாரி ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகளை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது கான்கிரீட்டில் பயன்படுத்தப்பட்ட சிமென்ட், கம்பியின் அளவு... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியவா்கள் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியைத் தாக்கி தங்க நகையை பறித்துச் சென்றவா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த துக்கையண்ணன் மகன் சுரேஷ் (42). தொழி... மேலும் பார்க்க

ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தேனி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். அரப்படித்தேவன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசாமி (52). இவா், வைகை அணை அருகே உள்ள நாட்டுக்கல் ஈஸ்வர... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு,... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் நகரின் குறைகளை சுட்டிக் காட்டலாமா? கண்டித்து பாதியில் வெளியேறிய ஆட்சியா்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சம்பந்தமின்றி நகரின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாதியிலே வெளியேறினாா். உத்தமபாளையம் ப... மேலும் பார்க்க