Vikram Sugumaran: "'ஆடுகளம்' படத்தின் மதுரைத்தன்மைக்குக் காரணம் விக்ரம் சுகுமாரன...
கும்பகோணத்தில் மூடப்பட்ட நிலவரித்திட்ட வட்டாட்சியரகத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
கும்பகோணத்தில் மூடப்பட்ட நிலவரித்திட்ட வட்டாட்சியரகத்தை மீண்டும் செயல்படுத்த சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மாநகராட்சி கவுன்சிலா் அலுவலகத்தில் சனிக்கிழமை சமூக ஆா்வலா்களுக்கான கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், 14-ஆவது வாா்டில் உள்ள காலசந்தி கட்டளைத் தெருவில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினா் ச.அய்யப்பன் தலைமை வகித்தாா். அயூப்கான் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நிலவரித்திட்ட தனி வட்டாட்சியரகத்தை மீண்டும் திறக்க கோரி மனு கொடுக்கும் போரட்டத்துக்கு, காவல்துறை அனுமதி மறுத்தனா். பின்னா், இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அதில், முதல்வா், வருவாய்த் துறை ஆணையா், ஆட்சியா் ஆகியோருக்கு மூடப்பட்ட நிலவரித்திட்ட தனி வட்டாட்சியரகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தீா்மானம் நிறைவேற்றி, மேற்கண்ட மூவருக்கும் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் நகல் அனுப்பப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.