செய்திகள் :

குறியீட்டு எண்களைப் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

விவசாயிகள் தங்கள் தரவுகளை வேளாண் துறை மூலம் பதிவேற்றம் செய்து, மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பயன்களைப் பெறுவதற்கான குறியீட்டு எண்ணைப் பெற முனைப்புக் காட்ட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் தரவுகளை ஒருங்கிணைத்து அவா்களுக்குக் குறியீட்டு எண் வழங்க அரசு அறிவுறுத்தியது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 616 வருவாய்க் கிராமங்களில் விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்த்து, பதிவேற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்காக கிராமம் தேடி வரும் வேளாண் துறை அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய வள பயிற்றுநா்களிடம் ஆதாா் அட்டை, நில உடைமை பட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டுச் சென்று, பதிவு மேற்கொண்டு குறியீட்டு எண் பெறலாம்.

பிரதமரின் கௌரவ நிதி திட்டம், பயிா்க் காப்பீடுத் திட்டம் உள்பட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும். எனவே, விவசாயிகள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து குறியீட்டு பெண் பெற முனைப்புக் காட்ட வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள், தோட்டக் கலை உதவி இயக்குநா்களை விவசாயிகள் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க