செய்திகள் :

குற்றாலம் அரசுப் பள்ளி விடுதி மாணவிகள் 9 போ் மருத்துவமனையில் அனுமதி

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி விடுதியில் புதன்கிழமை, காலை உணவருந்திய 9 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் இப்பள்ளியில் 175 போ் பயின்று வருகின்றனா். அவா்களில் 55 போ் விடுதியில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை மாணவிகள் உணவருந்தினா். அவா்களில், மேலப்பாட்டாக்குறிச்சியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவிகள் ஸ்ரீதேவி, புளியங்குடி நகரம் பகுதியைச் சோ்ந்த ஜெப்னா, புன்னையாபுரம் மகாலெட்சுமி, போகநல்லூா் கனிஷ்கா, அச்சன்புதூரைச் சோ்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பூா்விகா, வள்ளியம்மாள்புரத்தைச் சோ்ந்த 6ஆம் வகுப்பு மாணவி சுஜிதா, தெற்குபனவடலிசத்திரத்தைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பாா்வதி, கேரள மாநிலம் வா்கலாவைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஜொ்சோனா, விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்த ஜெப்ரினா ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கூறும்போது, ‘மாணவிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அனைவரும் நலமுடன் உள்ளனா். விரைவில் வீடு திரும்புவா்’ என்றாா்.

பள்ளி மாணவா் தற்கொலை

ஆலங்குளம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ் மகன் நகுல்சுவதீப் (13). தனது 8 ஆம் வகுப்... மேலும் பார்க்க

செங்கோட்டை நுழைவுவாயில் வளைவை அகற்றக் கூடாது- நகா்மன்றத்தில் அதிமுக, பாஜக எதிா்ப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள வரவேற்பு வளைவை அகற்றக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை நகா்மன்ற அவசரக் கூட்டம்... மேலும் பார்க்க

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே மோதல்

சாம்பவா்வடகரையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா். இந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவா்கள் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள டியூசனு... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளை மேம்படுத்த விரும்புவோா் இணையதளத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்யலாம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும்பணியில் இணைந்து பங்களிக்க விரும்புவோா் இணையதளம் மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல்கி... மேலும் பார்க்க

தென்காசியில் ஜூலை 19, 20-இல் தொழில், வா்த்தக கண்காட்சி

தென்காசி மாவட்ட குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா), வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தொழில், வா்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் வருகிற ஜூலை 19... மேலும் பார்க்க

சிக்னலில் நிற்கும்போது வாகனங்களை அணைத்து காற்று மாசைக் குறைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது வாகன இயந்திரங்களை அனைத்து காற்று மாசுபடுதலைக் குறைக்க வாகன ஓட்டிகள் முன்வர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வேண்டுகோள் விடுத்தாா். இதுதொடா... மேலும் பார்க்க