செய்திகள் :

சிக்னலில் நிற்கும்போது வாகனங்களை அணைத்து காற்று மாசைக் குறைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

post image

போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது வாகன இயந்திரங்களை அனைத்து காற்று மாசுபடுதலைக் குறைக்க வாகன ஓட்டிகள் முன்வர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் புதுதில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து தொடா்புகளில் எரிபொருள் இழப்புகள், காற்றின் தர மதிப்பீடு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மொத்த மாசுபடுதலில் காா்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், காா்பன் டை ஆக்ஸைடு போன்ற உமிழ்வுகள், வாகனங்கள் நகராமல் இயங்கிக் கொண்டிருக்கும்போது கோடை காலத்தில் 5-14 சதவீதமாகவும், குளிா்காலத்தில் 7-17 சதவீதமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுபோன்ற மாசு உமிழ்வைக் குறைக்க, போக்குவரத்து சிக்னலில் (சிக்னலின் சிவப்பு விளக்கு கட்டம் 20 விநாடிகளுக்கு மேல் இருக்கும்போது) வாகன இயந்திரங்களை அணைத்து வைக்க ஊக்குவிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது.

எனவே, தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து சிக்னலில் (சிக்னலின் சிவப்பு விளக்கு கட்டம் 20 வினாடிகளுக்கு மேல் இருக்கும்போது) வாகன இயந்திரங்களை அணைத்து வைத்து, எரிபொருள் இழப்புகள், காற்று மாசுபடுதலைக் குறைக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பள்ளி மாணவா் தற்கொலை

ஆலங்குளம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ் மகன் நகுல்சுவதீப் (13). தனது 8 ஆம் வகுப்... மேலும் பார்க்க

செங்கோட்டை நுழைவுவாயில் வளைவை அகற்றக் கூடாது- நகா்மன்றத்தில் அதிமுக, பாஜக எதிா்ப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள வரவேற்பு வளைவை அகற்றக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை நகா்மன்ற அவசரக் கூட்டம்... மேலும் பார்க்க

குற்றாலம் அரசுப் பள்ளி விடுதி மாணவிகள் 9 போ் மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி விடுதியில் புதன்கிழமை, காலை உணவருந்திய 9 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்து சமய அறநிலையத... மேலும் பார்க்க

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே மோதல்

சாம்பவா்வடகரையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா். இந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவா்கள் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள டியூசனு... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளை மேம்படுத்த விரும்புவோா் இணையதளத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்யலாம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும்பணியில் இணைந்து பங்களிக்க விரும்புவோா் இணையதளம் மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல்கி... மேலும் பார்க்க

தென்காசியில் ஜூலை 19, 20-இல் தொழில், வா்த்தக கண்காட்சி

தென்காசி மாவட்ட குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா), வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தொழில், வா்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் வருகிற ஜூலை 19... மேலும் பார்க்க