பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
குலசேகரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குமரி மாவட்டம், திற்பரப்பு அருகே பாஜக அலுவலகம் உள்பட சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் விஜயா தலைமையில் செவ்வாய்க்கிழமை சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டில் செயல்பட்டு வந்த பாஜக அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள வீடு ஆகியவற்றை அகற்ற வந்தனா். போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.
அப்போது அங்கு திரண்ட பாஜகவினா் கட்சி அலுவலகம் மற்றும் அருகிலுள்ள வீட்டை இடித்து அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, கால அவகாசம் கேட்டனா். அதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் உடன்பட வில்லை.

இதையடுத்து ஆக்கிமிப்பு வீடு, பாஜக அலுவலகம் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஒருவரின் வீட்டின் முன்புற பகுதியும் இடித்து அகற்றப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.