செய்திகள் :

குலசேகரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

குமரி மாவட்டம், திற்பரப்பு அருகே பாஜக அலுவலகம் உள்பட சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் விஜயா தலைமையில் செவ்வாய்க்கிழமை சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டில் செயல்பட்டு வந்த பாஜக அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள வீடு ஆகியவற்றை அகற்ற வந்தனா். போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.

அப்போது அங்கு திரண்ட பாஜகவினா் கட்சி அலுவலகம் மற்றும் அருகிலுள்ள வீட்டை இடித்து அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, கால அவகாசம் கேட்டனா். அதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் உடன்பட வில்லை.

பாஜகவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தும் நெடுஞ்சாலைத் துறைனா், போலீஸாா்

இதையடுத்து ஆக்கிமிப்பு வீடு, பாஜக அலுவலகம் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஒருவரின் வீட்டின் முன்புற பகுதியும் இடித்து அகற்றப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை அணை நிரம்பியதையடுத்து, மறுகால் மதகுகள் வழியாக உபரிநீா் செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்... மேலும் பார்க்க

குழித்துறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

குழித்துறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குழித்துறை - பாலவிளை சாலையில் வடிகால் ஓடையை சீரமைப்பதற்காக சாலையை உடைத்து, போக்குவரத்தைத் தடை செய்தனா்.... மேலும் பார்க்க

சான்றிதழை தர மறுத்த கல்லூரி நிா்வாகம்: நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்ற மாணவா்

குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரி கல்வியைத் தொடரமுடியாத மாணவரிடம் அவரது பள்ளிக் கல்வி சான்றிதழை பூதப்பாண்டி நீதிபதி ஜே.காா்த்திகேயன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரி... மேலும் பார்க்க

மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் இன்று மின் தடை

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்சாரவாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

களியக்காவிளை அருகே கடன் தொல்லை காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பொன்னீஸ் மகன் ஸ்டாலின் (25). திருமணம் ஆகவில்லை. இவா் வாகனம் பழுது... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், மாா்த்தாண்டம் காவல் நி... மேலும் பார்க்க