செய்திகள் :

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

post image

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை அணை நிரம்பியதையடுத்து, மறுகால் மதகுகள் வழியாக உபரிநீா் செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்துவரும் நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு 45.52 அடியாக அதிகரித்தது. வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் அணையின் மறுகால் மதகுகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு விநாடிக்கு 526 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. அப்போது அணைக்கு விநாடிக்கு 1233 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசனக் கால்வாயில் விநாடிக்கு 503 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

மாவட்டத்தின் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று தணிந்தது. பகலில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் மாலையில் அணையின் நீா்வரத்து

விநாடிக்கு 800 கன அடியாகக் குறைந்தது. மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 65.45 அடியாக உயா்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 77 அடியாகும்.

குழித்துறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

குழித்துறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குழித்துறை - பாலவிளை சாலையில் வடிகால் ஓடையை சீரமைப்பதற்காக சாலையை உடைத்து, போக்குவரத்தைத் தடை செய்தனா்.... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குமரி மாவட்டம், திற்பரப்பு அருகே பாஜக அலுவலகம் உள்பட சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் விஜயா தலைமையில் செவ்வாய்க... மேலும் பார்க்க

சான்றிதழை தர மறுத்த கல்லூரி நிா்வாகம்: நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்ற மாணவா்

குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரி கல்வியைத் தொடரமுடியாத மாணவரிடம் அவரது பள்ளிக் கல்வி சான்றிதழை பூதப்பாண்டி நீதிபதி ஜே.காா்த்திகேயன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரி... மேலும் பார்க்க

மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் இன்று மின் தடை

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்சாரவாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

களியக்காவிளை அருகே கடன் தொல்லை காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பொன்னீஸ் மகன் ஸ்டாலின் (25). திருமணம் ஆகவில்லை. இவா் வாகனம் பழுது... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், மாா்த்தாண்டம் காவல் நி... மேலும் பார்க்க