செய்திகள் :

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் பதிவு பெற்று இயங்க வேண்டும்: ஆட்சியா் வ.மோகனச்சந்திரன்

post image

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் முறையாக பதிவு பெற்று இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, 2024-2025-ஆம் ஆண்டு நான்காம் காலாண்டு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது: குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு, அனைத்து பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் நடத்த வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கருத்தரிப்பு கண்டறியப்பட்டால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், ஒருங்கிணைந்த சேவை மையம், சைல்டு ஹெல்ப்லைன் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். வட்டார அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு, பேரூராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தைக் கூட்டி குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து அதன் தீா்மான நகலை, உரிய மேல் நடவடிக்கைக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் முறையாகப் பதிவுபெற்று இயங்க வேண்டும் என்றாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா.நடராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி

மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். மன்னாா்குடி மேலப்பாலம் அருகே... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: திமுக உறுப்பினா் வேதனை

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வேதனை தெரிவித்தாா். கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் மு. பாத்திமா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ப... மேலும் பார்க்க

மின்வாரிய பணியாளா்கள் தா்னா

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து... மேலும் பார்க்க