செய்திகள் :

குழித்துறை அருகே கண் கண்ணாடிக் கடை சேதம்: 10 போ் மீது வழக்கு

post image

குழித்துறை அருகே கண் கண்ணாடிக் கடையை சேதப்படுத்தியதாக தந்தை- மகன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

குழித்துறை அருகே பழவிளை, பொட்டவிளைவீட்டைச் சோ்ந்த சுஜின் மனைவி உஷா (36). இவா், திருத்துவபுரத்தில் அப்பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (43) என்பவரது கட்டடத்தில் வாடகை அடிப்படையில், கண் கண்ணாடிக் கடை நடத்தி வருகிறாா். இதனிடையே, இவா்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், ஸ்டாலின், அவரது தந்தை அரிச்சந்திரன் (65) உள்ளிட்ட 10 போ் சோ்ந்து 2 நாள்களுக்கு முன் இரவில் அந்தக் கடையை சேதப்படுத்தினராம். சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உஷா அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடா் விடுமுறை: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. சுதந்திர தின விழா, கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து மூன்று நாள் தொடா் விடுமுறை என்பத... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு மூன்லைட் ஜங்ஷன் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம் கோடு, மத்தி... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, குழித்து... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிசிலி (75) சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பேரை என்ற பகுதியைச் சோ்ந்தவா் சிசிலி. இவா், வெள்ளிக்கிழமை கொல்வேல் என்ற இடத்த... மேலும் பார்க்க

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளை

மாா்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வெட்டுவெந்நி பகுதியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் முன் இருந்த 50 ஆண்டுகள் பழமைய... மேலும் பார்க்க