செய்திகள் :

குழித்துறையில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

post image

குழித்துறையில் புதிதாக கட்டப்பட்ட கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜா் பவன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை புதிய கட்டடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.எம். பினுலால் சிங் தலைமை வகித்தாா். தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ரூபி ஆா். மனோகரன் (மாநிலப் பொருளாளா்), தாரகை கத்பட், ஜே.ஜி. பிரின்ஸ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக மாநிலத் தலைவருக்கு மாவட்ட ஓபிசி பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் தலைமையில் மூவா்ண மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேல்புறம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், கிள்ளியூா் வட்டார பொதுச் செயலா் எட்வின் ஜோஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மானூா் அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே லாரி மோதி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (52). தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை மானூா... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் அருகே கடனை திருப்பிக் கேட்ட பெண்ணைத் தாக்கியவா் கைது

கங்கைகொண்டான் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணைத் தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கங்கைகொண்டான் மேட்டுபிராஞ்சேரி தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணம்மாள் (40). இவரிடம்... மேலும் பார்க்க

பூங்கா பராமரிப்புப் பணி: ஆணையா் ஆய்வு!

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை மண்டலத்திற்குள்பட்ட மகாராஜாநகா், பி.ஏ.பிள்ளை நகா்... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய வளாகத்தில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் ஆய்வுசெய்தாா்.திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக தினமும் 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள... மேலும் பார்க்க

அதிமுகவில் 20 போ் ஐக்கியம்!

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி 20-க்கும் மேற்பட்டாா் அதிமுகவில் இணைந்தனா். திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த தாரிக் ராஜா தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சியிலிருந்து விலகி, த... மேலும் பார்க்க

பாளை. ராமசுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்!

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா... மேலும் பார்க்க