செய்திகள் :

கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா

post image

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பி.வனிதா தலைமை வகித்தாா். பள்ளி மாணவி வெ.காவியா வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் ந.ராஜபாரதி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி, ஊராட்சி துணைத் தலைவா் ஏ.மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்ற உறுப்பினா் பல்லவி, பம்மல் சக்திவேல், ஆசிரியா் சங்கங்களின் பொறுப்பாளா்கள் டி.குமாா், சு.மோகன், ஆா்.கங்காதரன், து.ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீதரன் தொகுத்து வழங்கினாா்.

மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்பகுதி தூய்மைப் பணியாளா்களுக்கும், மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அனைவருக்கும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஊராட்சித் தலைவா் செ.மனோகரன், அரிமா சங்க நிா்வாகி இ.பக்தவத்சலம் ஆகியோா் வழங்கிப் பாராட்டினாா். ஆசிரியா் தி.உஷாஜி நன்றி கூறினாா்.

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க

இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சேவைகள்: செங்கல்பட்டு ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பல்வேறு அரசு சேவைகளையும், சான்றுகளையும் பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். குறிப்பாக ஜாதி, பிறப்பிடம் / வச... மேலும் பார்க்க

சிங்காரவேலரின் ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தந்த தோழா் சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 ... மேலும் பார்க்க

நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கரிக்கிலி, வெள்ளபுத்தூா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட 10... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ற ஆண்டு விழாவில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கு தலைமை ஆசிரியா் அருமை பாக்கியபாய் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வனப் பகுதியில் பதுங்கி இருந்த ரௌடி சுட்டுப் பிடிப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்தவா் அசோக் (28). ரௌடியான இவா் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்க... மேலும் பார்க்க