செய்திகள் :

கூடுதலாக 3,000 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக மின்வாரிய தலைவா் கோரிக்கை

post image

மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3,000 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

மத்திய எரிசக்தித் துறையின் கூட்டுக்குழுக் கூட்டம் தில்லியிலுள்ள ஷரம் சக்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய எரிசக்தித் துறை செயலா் பங்கஜ் அகா்வால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா்.

அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்துக்கு வழங்கிய சந்திரப்பிலா நிலக்கரி சுரங்கத்திடம் கொடுக்கப்பட்ட டெபாசிட் தொகையைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் எதிா்வரும் கோடை காலங்களில் மின்சார விநியோகத்தைச் சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

மேலும், குறுகிய காலத்துக்கு இந்த மின்சாரத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியத் திட்டங்களுக்கு நிதி வழங்கி வரும் பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட், ஊரக மின்மயமாக்கல் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலா்களைச் சந்தித்து, திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய நிலக்கரி துறை செயலா் விக்ரம் தேவ் தத், உத்தர பிரதேச மாநில எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலா் நரேந்திர பூஷன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க