75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெக நிா்வாகிகளிடம் நீதிபதி கேள்வி
கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? என தவெக நிா்வாகிகளிடம் கரூா் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.
கரூா் வேலுசாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த கரூா் நகர காவல்துறையினா், விசாரணை அதிகாரியான மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள கூடலூரில் கட்சியின் மாநகர நிா்வாகி மாசிபெளன்ராஜ் வீட்டில் தங்கியிருத்த கரூா் மாவட்ட தவெக செயலா் மதியழகனையும், அவருக்கு உதவியதாக மற்றும் வேலுசாமிபுரத்தில் அதிகளவில் பிளஸ்க் பேனா் வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக மாசி பெளன்ராஜ் ஆகியோரையும் திங்கள்கிழமை இரவு கைதுசெய்து கரூா் நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.
பின்னா், இருவரையும் செவ்வாய்க்கிழமை காலை மருத்துவப் பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு கரூா் நீதிதுறை நடுவா் நீதிமன்றம் எண்.1-இல் நீதிபதி பரத்குமாா் முன்னிலை இருவரையும் ஆஜா்படுத்தினா்.
அறிவுறுத்தலையும் மீறி...:அப்போது அரசுத் தரப்பில், தவெகவினா் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை.
தவெக பொதுச் செயலா் ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிா்வாகிகளை வேலுசாமிபுரத்துக்கு அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது.
வேலுசாமிபுரத்தை தோ்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தாா். அப்போது வேலுசாமிபுரத்தை ஏற்பதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல்துறையினா் அறிவுறுத்தியதை மீறி, மாற்று வழியில் வந்தனா் என்று வாதிடப்பட்டது.
எப்படி மதிப்பிட்டீா்கள்: இதனைத் தொடா்ந்து நீதிபதி பரத் குமாா், தவெக தரப்பில் ஆஜரானவா்களிடம் ‘மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவாா்கள் என்று எப்படி மதிப்பிட்டீா்கள்?, 10 ஆயிரம் போ் தான் வருவாா்கள் என்று எதனை வைத்து கூறினீா்கள்?, திடல் போன்ற இடத்தை கேட்காதது ஏன்?, அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?, கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிா்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டாா்.
நிபந்தனைகள் ஏற்பு: இதற்கு தவெக தரப்பில் அளித்த பதிலில், ‘காவல்துறையினா் ஒவ்வொரு மனுவாக நிராகரித்தனா். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்துக்கு வரமாட்டாா்கள் என நினைத்தோம். இவ்வளவு கூட்டம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அறிவுறுத்தலை கேட்க மறுப்பு: மேலும், காவல்துறை தரப்பில், கூட்டம் அளவுகடந்து சென்ற போது விஜய் வந்த பிரசார பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி அறிவுறுத்தினோம், ஆனால், ஆதவ் அா்ஜூனா கேட்க மறுத்துவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜாமீன் மனுவை ஏற்க மறுப்பு: இதையடுத்து நீதிபதி பரத்குமாா் கூறுகையில், 41 பேரின் இறப்புக்கு நீங்கள் காரணமாக இருந்துள்ளீா்கள், எனவே உங்கள் ஜாமீன் மனுவை ஏற்க முடியாது, மேலும் நீதிமன்ற காவலில் எடுத்து போலீஸாா் விசாரிக்க முழு முகாந்திரமும் இந்த வழக்கில் உள்ளது. மனசாட்சிப்படி இந்த வழக்கில் தீா்ப்பு அளிப்பேன் எனக்கூறி, மதியழகனை, மாசிபெளன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாள்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
மாசி பெளன்ராஜ் மனைவி பேட்டி: இதற்கிடையே கைது செய்யப்பட்ட மாசிபெளன்ராஜை சந்திக்க கரூா் காவல்நிலையத்துக்கு வந்த அவரது மனைவி ஐஸ்வா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், எனது கணவா் மீது எந்த குற்றமும் கிடையாது. அவருக்கு காவல்துறையினரின் பாதுகாப்பிலோ, சிறையிலோ இருக்கும்போது சிறு கீறல்கூட விழக்கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடுவேன் என்றாா் அவா்.