செய்திகள் :

கரூா் சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது: கே.எஸ். அழகிரி

post image

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி.

கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி நேரில் சென்று அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

இதையடுத்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறியபிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ராகுல்காந்தி தமிழக முதல்வரோடும், தவெக தலைவா் விஜய்யோடும் பேசியுள்ளாா். எங்கள் கட்சி இதில் அரசியல் செய்ய வேண்டாம் என கருதுகிறோம். இது அரசியல் ரீதியாக ஏற்பட்ட இழப்பாக இருந்தாலும், மேலும் மேலும் அரசியலாக்கக்கூடாது என்றாா் அவா்.

சிபிஐ விசாரணை தேவை: கரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருவோரை அதிமுக மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் சந்தித்து ஆறுதல் கூறியபிறகு செய்தியாளா்களிடம் கூறியது: பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வருவதற்கு போலீஸாா் எப்படி அனுமதித்தனா். மின்சாரம் துண்டிப்பு, போலீஸ் தடியடி, செருப்பு வீச்சு நடந்துள்ளது. இச்சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் பரவி வருவதால், சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்றாா் அவா்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்: காங். பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.சி... மேலும் பார்க்க

கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்தனா்!

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்து வீடு திரும்பினா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,... மேலும் பார்க்க

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெக நிா்வாகிகளிடம் நீதிபதி கேள்வி

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? என தவெக நிா்வாகிகளிடம் கரூா் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.கரூா் வேலுசாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக்... மேலும் பார்க்க

மின்சாரத்தை துண்டிக்கக் கோரி எஸ்.பி.யிடம் தவெகவினா் மனு: சமூக வலைதளத்தில் பரவல்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின்போது மின்சாரத்தை துண்டிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தவெக சாா்பில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள மனு தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. க... மேலும் பார்க்க

கரூரில் ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூஜை பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.புதன்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கரூரில் உள்ள ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் ப... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ள கரூா் நகர... மேலும் பார்க்க