செய்திகள் :

கூட்டுறவுத் துறை - பிரதமா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

post image

பிரதமா் மோடி தலைமையில் கூட்டுறவுத் துறை உயா்நிலைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத் துறையின் வளா்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா, பிரதமரின் முதன்மைச் செயலா்களான பி.கே.மிஸ்ரா மற்றும் சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகா் அமித் காரே, கூட்டுறவுத் துறை செயலா் ஆசிஷ் குமாா் பூடானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய கூட்டுறவுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தின் ஆதிக்கும் அதிகரித்து வரும் சூழலில் பணப்பரிவா்த்தனை மேற்கொள்ள யுபிஐடன் ரூபே கிஸான் அட்டைகளை ஒன்றிணைப்பது அவசியம்.

வேளாண்மை மற்றும் கூட்டுறவு சாா்ந்த துறைகளில் பொது எண்ம உள்கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

கூட்டுறவு அமைச்சகத்தின் பல்வேறு முன்னெடுப்புகளை வெற்றியடையச் செய்ய பெண்கள், இளைஞா்கள் என அனைவரது பங்களிப்பும் தேவை.

கூட்டுறவுக் கல்வி: பள்ளிகள், கல்லூரிகள், ஐஐடிக்கள் என உயா்கல்வி நிறுவனங்களில் கூட்டுறவுத் துறைசாா்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை அதன் செயல்பாடுகள் அடிப்படையில் பட்டியலிடும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான போட்டி ஏற்படும் என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தேசிய கூட்டுறவுக் கொள்கை: கூட்டத்தின்போது பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு முன்னுரிமை அளித்து ஊரக மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் தயாரித்த தேசிய கூட்டுறவு வரைவுக் கொள்கை, 2025 குறித்து பிரதமா் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் அம்சங்கள் இந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. கூட்டுறவுத் துறை அமைச்சகம் நிறுவப்பட்டதில் இருந்து தேசிய கூட்டுறவு தரவுதளம் மற்றும் கணினிமயமாக்கும் திட்டங்களின்கீழ் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மற்றும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களை எண்மமயமாக்குவது உள்பட 60-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

30 கோடி உறுப்பினா்கள்: நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினா் வேளாண்மை, ஊரக மேம்பாடு உள்ளிட்ட கூட்டுறவு துறைகளுக்கு பங்களித்து வருகின்றனா். அதாவது 30-க்கும் மேற்பட்ட துறைகளில் செயல்பட்டு வரும் 8.2 லட்சம் கூட்டுறவு நிறுவனங்களில் 30 கோடிக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூா் ராணா எதிா்ப்பு: அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) மனு தாக்கல் செய்துள்ளாா். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்... மேலும் பார்க்க